காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தையை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (37), லாரி டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. ப்போதெல்லாம் இரு மகள்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு, தான் மட்டும் காவேரிப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தனலட்சுமி சென்றுவிடுவார். அதன்பின், கோபம் தணிந்தவுடன் மீண்டும் திரும்புவார். இதே போல், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்ட தனலட்சுமி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.