தர்மபுரி அருகே அதிர்ச்சி: 10 வயது மகள் பலாத்காரம் தந்தை போக்சோவில் கைது

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, 10 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தையை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (37), லாரி டிரைவர்.  இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது. ப்போதெல்லாம்  இரு மகள்களையும் வீட்டிலேயே விட்டு விட்டு, தான் மட்டும் காவேரிப்பட்டணத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தனலட்சுமி சென்றுவிடுவார். அதன்பின்,  கோபம் தணிந்தவுடன் மீண்டும் திரும்புவார். இதே போல், கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவருடன் சண்டை போட்ட தனலட்சுமி, தாய் வீட்டுக்கு  சென்று விட்டார்.

சமீபத்தில் திரும்பி வந்த அவர், காரிமங்கலம் காவல் நிலையத்தில் கணவர் மீது கொடுத்த புகாரில், தான் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு  சென்ற சமயத்தில், வீட்டில் இருந்த 10 வயதான 2வது மகளை,  கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்திருந்தார். அதன்பேரில், போலீசார்  சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தனது மகளை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பாலக்கோடு  அனைத்து மகளிர் போலீசார், சண்முகத்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

Related Stories: