பொன்னேரி: பொன்னேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூரை சேர்ந்தவர் சரவணன்(36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி. தம்பதிக்கு தியாஸ், தர்ஷினி என்ற மகன் மகள் உள்ளனர். இவர், குடும்பத்துடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூரில் இருந்து இடம் மாறி பொன்னேரி என்ஜிஒ நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். தினமும் திருவொற்றியூருக்கு ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பொன்னேரிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை திருவொற்றியூருக்கு சென்றுவிட்டு பொன்னேரிக்கு சென்று கொண்டிருந்தார். மீஞ்சூர் அடுத்த இலவம்பேடு என்ற இடத்தில் சென்றபோது காரில் பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல் சரவணனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்ட வந்தனர். அதனைப்பார்த்த சரவணன், பைக்கை சாலையில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி கன்டெய்னர் யார்டு கம்பெனியில் நுழைந்தார்.