களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமணி மனைவி பிரேமசுதா. இவர் நெல்லை தாமிரபரணி இரண்டாம் பட்டாலியன் போலீஸ் பிரிவில் பணி புரிந்து வந்தார். 8 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தபோது பிரேமசுதா உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரேமசுதாவின் வாரிசுக்கு அரசு வேலை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான பணி நியமனத்தை வழங்கும்படியும் தமிழக அரசிடம் இருந்து தாமிரபரணி 2ம் பட்டாலியன் போலீஸ்பிரிவுக்கு கடிதம் வந்துள்ளது. அப்போது பிரமேசுதாவின் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தேடியபோது கிடைக்கவில்லை.