கோவை: பாலியல் தொல்லை கொடுத்ததை போலீசில் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதால் திருநங்கையை கொன்றதாக கைதான வாலிபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டை சேர்ந்தவர் சங்கீதா (59). கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவராக இருந்தார். வடகோவையில் ‘’டிரான்ஸ் கிச்சன்’’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தார். கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் பேரலில் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். இதில், கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த நாகப்பட்டினம் தரங்கம்பாடியை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.