கூடலூர்: பழங்குடியின (எஸ்.டி.) பெண் ஊராட்சி தலைவரை மிரட்டிய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.எஸ்பி.யிடம் புகார் தரப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூட அ.தி.மு.க. உறுப்பினர் கிடையாது. தலைவராக பழங்குடியினத்தை சேர்ந்த கீர்த்தனா என்பவர் உள்ளார். இவர் நேற்று கூடலூர் டி.எஸ்பி. மற்றும் கூடலூர் போலீசில் அ.தி.மு.க. பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தன்னை தரக்குறைவாக திட்டி மிரட்டியதாக புகார் மனு அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 20ம் தேதி தலைவர் அறையில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆனந்தராஜ் மகேசன் மற்றும் துணை தலைவர் தாமோதரன் ஆகியோருடன் வளர்ச்சி பணி சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தேள். அப்போது, அ.தி.மு.க.வை சேர்ந்த பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் அவருடன் சில நபர்கள் எந்தவித அனுமதியின்றி அறைக்குள் அத்துமீறி நுழைந்தனர். நான் ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர், நான் சொல்கிற நபர்களுக்குத் தான் டெண்டரில் நீ பணிகளை ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் உன்னை நிர்வாகம் நடத்த விடமாட்டேன் என்று ஒருமையில் பேசியதோடு, நீ எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எனக்கு கவலை இல்லை. என்று மிரட்டினார்.மேலும், நீ ஆதிவாசி தலைவர்.