டெல்லி : பெண் விமானிகளின் முதல் அணியை கடற்படை இணைத்துக் கொண்டது.இந்திய கடற்படையின் முதல் பெண் விமானிகளின் அணி தெற்கு கடற்படை தளத்தால் இணைத்துக் கொள்ளப்பட்டது. டோர்னியர் விமானத்தில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்.லெப்டினெண்ட் திவ்யா சர்மா (புதுடெல்லி), லெப்டினெண்ட் சுபாங்கி சுவரூப் (உத்திரப் பிரதேசம்) மற்றும் லெப்டினெண்ட் ஷிவாங்கி (பிஹார்) ஆகியோர் முதல் அணியில் உள்ள மூன்று விமானிகள் ஆவர்.