தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜூலியட் ஜீசர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணையில், வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த பாலமுருகன் (40), வியாசர்பாடி அண்ணாசாலையை சேர்ந்த சதீஷ் (40), அலி (38), கமலுதீன் (எ) மங்கா (35), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த மருது (49), அந்தோணிசாமி (48), மண்ணடியை சேர்ந்த சந்துரு (34), புகழேந்தி (36) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.