பெரம்பூர்: அயனாவரம் டி.பி.சண்முகம் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (41). அதே பகுதியில் பால் கடை நடத்தி வரும் இவர், வில்லிவாக்கம் தெற்கு பகுதி பாஜ பொருளாளராக உள்ளார். இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, அயனாவரம் பகுதியில் பேனர் வைத்துள்ளார். இதுதொடர்பாக, அயனாவரம் ரங்கநாதன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சசிகுமாருக்கும் (30), இவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, அந்த பேனரை சசிகுமார் கிழித்துள்ளார். இதுகுறித்து ஜெயக்குமார் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், இருவரையும் அழைத்து பேசி பிரச்னையை முடித்து வைத்தனர்.