கொல்கத்தா : மகளிருக்கு அதிகாரம் அளிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த துர்கா பூஜை நிகழ்ச்சியை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சக்தியின் அடையாளமாக துர்கா கடவுள் வணங்கப்படுவதாக குறிப்பிட்டார். நாட்டின் 26 கோடி மகளிருக்கு வங்கிக்கணக்கு தொடக்கம், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் அளித்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் அவர்களுக்கு கற்பிப்போம் திட்டம் தொடக்கம், பேறுகால விடுப்பு 12 வாரத்தில் இருந்து 26 வாரங்களாக அதிகரித்தது உள்ளிட்ட மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.