திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பணத்தை காண்பித்து ஆசைவார்த்தை கூறி பாலியலுக்கு சிறுமியை அழைத்த மின்வாரிய உதவி செயற்பொறியாளரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர், கணேசபுரத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (54). இவர் காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் அலமாதி வரையிலான உயர்மின் அழுத்த மின்சார கம்பி அமைக்கும் பணியில் சிறப்பு பிரிவு உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வேலையின் காரணமாக, வெள்ளவேடு அடுத்த மேல்மணம்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.