கோவையில் திருநங்கை கழுத்து அறுத்து கொலை

கோவை:  கோவை சாயிபாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (59). இவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம்  வீசியதாக அக்கம்பக்கத்தினர் சாயிபாபா காலனி போலீசாருக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கே சென்று பார்த்தனர். அப்போது 5 அடி  உயர பேரலில் சங்கீதாவின் சடலம் மடக்கி வைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், 3 நாளுக்கு முன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம  நபர்கள், சடலத்தை வெளியே கொண்டு ெசல்ல முயன்றுள்ளனர். மக்கள் நடமாட்டம் காரணமாக சடலத்தை கொண்டு செல்ல முடியாமல் தண்ணீர்  ஊற்றி வைக்கும் பேரலில் போட்டு மூடி சென்று விட்டனர்.

சங்கீதாவின் தந்தை பெயர் மருதன். சங்கீதா 30 ஆண்டிற்கு முன்பு ஆணாக இருந்துள்ளார். பின்னர் ஆபரேஷன் மூலமாக திருநங்கையாக  மாறியுள்ளார். கோவை மாவட்ட திருநங்கைகள் நல சங்க தலைவராக இருந்து வந்தார் என்று தெரியவந்தது. மேலும், சங்கீதாவுக்கும், மேலும் சில  திருநங்கைகளுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. சங்கீதாவின் கட்டுப்பாட்டில் திருநங்கைகள் பலர் இருந்துள்ளனர். சிலர் அவரது சங்கத்தின் கீழ்  செயல்பட மறுத்து விட்டனர். அதனால், இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து, சந்தேகத்தினர் பேரில், 30க்கும்  மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: