காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு தொடர்பாக, முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவிடம் 2வது முறையாக, அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் கடந்த 2002 மற்றும் 2011 கால கட்டத்தில், 43.69 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் கடந்த திங்கட்கிழமை அமலாக்கத்துறை விசாரித்தது. இந்நிலையில், நகர் ராஜ்பாக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேற்று அவர், 2வது முறையாக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விவசாரணை நடத்தினர்.