காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிநேரத்தில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்ட போலீசார் மற்றும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை எடுத்துக்கொண்ட காவல்துறையினருக்கு அந்தக் காலத்தற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது காவல் துறையினரிடையே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவத் தொடங்கிய நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், செய்தியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக களத்தில் நின்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.