சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடதுக்கீடு விவகாரத்தில், கவர்னருக்கு, முதல்வர் அழுத்தம் கொடுக்காதது அந்த மாணவர்களுக்கு செய்யும் துரோகம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
மருத்துவ கல்விக்கான நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால், 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு இன்று வரை கவர்னர் ஒப்புதல் கொடுக்காமல் இருப்பதும், அதுகுறித்த எந்த அழுத்தத்தையும் கவர்னருக்கு கொடுக்காமல் முதல்வர் பழனிசாமி வேடிக்கை பார்ப்பதும், அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.