திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த தமிழக பக்தருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இந்த பூஜைக்காக சபரிமலையில் 7 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் 250 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழை இணைக்க வேண்டும்.