டெக்ரான்: ஈரான் மீது ஐநா சபை 15 ஆண்டுகளுக்கு முன் விதித்த ஆயுதத் தடை நேற்றுடன் முடிந்தது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு, தீவிரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ஈரான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது. இதனால், கடும் நெருக்கடிக்கு ஆளான ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தது. எனவே, பொருளாதாரத் தடைகளை மட்டும் ஐநா திரும்பப் பெற்றது. ஆனால், ஆயுதத் தடை அக்டோபர் 18ம் தேதி 2020 வரை தொடரும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.