வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த தாங்கி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் சாந்தி (50). அதே பகுதியில் ஆடு மேய்த்து வந்தார். கடந்த செப்டம்பர் 4ம் தேதி மாலை சாந்தி, வேகவதி ஆற்றுப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் அவர், சடலமாக கிடந்தார். புகாரின்படி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதேபகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்திரஜித் முக்யா (25) என்பவர், சாந்தியை பலாத்காரம் செய்து, கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். இந்நிலையில், சிறையில் உள்ள இந்திரஜித் முக்யாவை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி சண்முகப்பிரியா, கலெக்டர் பொன்னையாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர், வாலிபர் இந்திரஜித் முக்யாவை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.