சேலம்: அதிமுகவின் 49வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி சேலத்தில் தங்கியிருக்கும் முதல்வரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் நேற்று காலை கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக முதல்வரின் வீட்டருகில் இருந்த அதிமுக கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு, அதற்கருகில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை 8.35மணிக்கு மேடைக்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.