வேலூர்: வேலூர் கலெக்டரின் பெயரில் போலி இமெயில் முகவரி தயாரித்து அதன் மூலம் அதிகாரிகளுக்கு நன்கொடை வழங்க கேட்டது தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் பெயரில் போலி இமெயில் முகவரி ஏற்படுத்தி அதன்மூலம் அனைத்து துறை அதிகாரிகள், பிரமுகர்களுக்கு தகவல் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் உங்களிடம் இருந்து ‘ஏதாவது’ செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு தெரிய வந்தது.