பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குற்றங்கள் குறித்து ஆலோசனை விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் மீனாட்சி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விளக்கமளித்தார் .முகாமில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத் பொன்னேரி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி, மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் மதியரசன் சட்டம்-ஒழுங்கு உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு விளக்கி பேசினர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.