கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கவரப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பகலவன், மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், கதிரவன், டாக்டர் பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், நெசவாளரணி மாநில நிர்வாகி, ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை, திமுக முப்பெரும் விழா ஆகியவை குறித்த கருத்துக்களை வழங்கினர்.