திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்  கவரப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு  தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் பகலவன், மாவட்ட நிர்வாகிகள் சந்திரன், கதிரவன், டாக்டர் பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வரவேற்றார்.  முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், நெசவாளரணி மாநில நிர்வாகி, ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்  கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில்  இணைய வழி உறுப்பினர் சேர்க்கை, திமுக முப்பெரும் விழா ஆகியவை குறித்த கருத்துக்களை வழங்கினர்.

கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மு.மணிபாலன், துணை செயலாளர் திருமலை, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக கவுன்சிலர்கள் அமலா சரவணன், ஜோதி உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர். கூட்டத்தில் திமுக முப்பெரும் விழாவில் மொழிப்போர் தியாகிகளின் குடும்பத்தினர், கட்சி மூத்த நிர்வாகிகளை கௌரவிப்பது, இணைய வழி உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்ததல், சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: