திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மோவூர் கண்டிகை கிராமத்தில் மயானத்துக்கு பாதை அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டி எழுந்துள்ளது. பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட மோவூர் கண்டிகை கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சுடுகாட்டுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் சடலத்தை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் அவல நிலை உள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.