அழுத்தம் காரணமாகவே மோடி குறித்து குஷ்பு விமர்சித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தக்கலை: குமரி மாவட்டம் தக்கலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: சகோதரி குஷ்பு பா.ஜவில் இணைந்தது மகிழ்ச்சிக்குரியது. அவர் அரசியலில் சாதாரண ஒரு ஆளைப் போல் இல்லாமல் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். 2013-14 லேயே பா.ஜவில் இணைய வேண்டியவர். மோடியை அவர் விமர்சனம் செய்தது சில சூழ்நிலைகளாலும் அழுத்தத்தினாலும் தான் என்று அவரே கூறியுள்ளார். பல்கலைகழகத்தை மேம்படுத்த துணை வேந்தர்கள் பல வகையில் பணம் திரட்டுவது வழக்கமானது. மாநில அரசு நிதி ஒதுக்கும். மத்திய அரசு நிதி ஒதுக்கும். இது போன்று செய்வது கடமை. அண்ணா பல்கலை வேந்தர் செய்ததில் தவறில்லை. பா.ஜ.கவை நோக்கி மக்கள் வருகிறார்கள், பா.ஜ. எல்லோருக்கும் சொந்தமான கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: