ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையை அடுத்த பாரதி நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வேலூர் மண்டல சுற்றுச்சூழல் இணை முதன்மை பொறியாளர் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பன்னீர்செல்வம் தொழிற்சாலை சம்பந்தமான கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு லஞ்சம் வருவதாக வந்த தகவலை அடுத்து நேற்று காட்பாடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வேலூர் மண்டல சுற்றுச்சூழல் இணை பொறியாளரான பன்னீர் செல்வம் என்பவரை காரை பின் தொடர்ந்து சென்று காட்பாடி பகுதியில் உள்ள அவரது தனி வீட்டில் சோதனையிட்டதில் அவரிடம் இருந்து கணக்கில் வராத 33 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.