கொரோனா விழிப்புணர்வுக்காக மதுரை டூ ராமேஸ்வரம் சைக்கிளில் பயணம்

திருப்புவனம்: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை கலாம் நற்பணி மன்றம், நேரு யுவகேந்திரா சார்பில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை சைக்கிளில் பயணம் செல்கின்றனர். மதுரையில் துவங்கிய பயணம் ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடம் வரை செல்ல இக்குழு திட்டமிட்டுள்ளது. நேற்று திருப்புவனத்தை கடந்த மாணவ, மாணவியர்கள் அடங்கிய 37 பேருக்கு வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சுந்தர் கூறுகையில், ‘யோகா, மூச்சு பயிற்சி மூலமும், சுகாதாரத்தை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா வராமல் தடுக்கலாம்.

இதுகுறித்த விழிப்புணர்வை வழியெங்கும் செய்யவுள்ளோம். மேலும் மதுரை- ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனை தவிர்க்க சாலையின் இருபுறமும் விதை பந்துகளை வீசி வருகிறோம்’ என்றார்

Related Stories: