திருவள்ளூர்: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கை:
தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள், வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் வரும் நாளை (15.10.2020) வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கீழ்க்கண்ட ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களை குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்துக்கான புளு பிரிண்ட் வரைபடம் (6 நகல்) கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகை கட்டிடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம்.