அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டமானது 2024 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மற்றுமொரு தனியார் நிறுவனம் ஒன்றினை நாசா இணைத்துக்கொள்ளவுள்ளது. குறித்த நிறுவனம் எது என்பது தொடர்பான தகவல்களை அடுத்த வாரம் அளவில் நாசா வெளிவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.