விவசாயி வீட்டில் கொள்ளை

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் சரத்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்(29). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் நேற்று வீட்டைப் பூட்டி பின்னர், சாவியை மறைவான இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார். பின்னர், நேற்று மதியம் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, வீட்டினுள் சென்ற பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 6 சவரன் தங்க நகை கொள்ளைபோனது தெரியவந்தது. இதுகுறித்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் அவர்  புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: