செங்கல்பட்டு: கடன் தொல்லை காரணமாக, இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச் சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு அடுத்த வெண்பாக்கம் பகுதியில், அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகின்றது. இந்த வளாகத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலம் இருப்பதைக்கண்ட மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து, உடனடியாக செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.