டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு சேவைப் பணியாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்! கொரோனாவால் காலமானார்..!

டெல்லி: டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட தடவைகள் கொரோனா நோயாளிகளின் உடல்களை எடுத்துச் சென்று சேவையாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர், இறுதியில் கொரோனா தொற்றால் பலியான பரிதாபம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லியில் இலவசமாக அவசரகால சேவைகளை வழங்கும் ஷஹீத் பகத் சிங் சேவா தளம் என்ற அமைப்பில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த ஆரிப் கான் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் 48 வயதான ஆரிப் கான், வீட்டில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால்,கடந்த 6 மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் ஆம்புலன்சிலேயே தங்கி, கொரோனா நோயாளிகளின் உடல்களை இறுதிச் சடங்கு செய்வதற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மேலும், இறுதிச் சடங்கு செய்ய பணம் இல்லாதவர்களுக்கு பண உதவியும், உற்றார் இல்லாத உடல்களுக்கு அவரே இறுதிச்சடங்கும் செய்து வந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆரிப் கான், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: