கடலூர்: கடலூர் தெற்குத்திட்டை பட்டியலின ஊராட்சித் தலைவர் அவமதிக்கப்பட்ட வழக்கில் சுகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள தெற்கு திட்டை ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர். ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமரவைத்து அவமதித்ததாக தலைவர் ராஜேஸ்வரி புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.