வாஷிங்டன்,:தனது 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த போது, அந்த குழந்தை இறந்ததால், அதன் இறப்பு விபரங்களை அறிய கூகுளில் ஆலோசனை கேட்ட தந்தை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஸ்டீவன் ஆஸ்டின் (29). இவர் தனது 10 மாத குழந்தை ஜாரா ஸ்க்ராக்கை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாண்ட்கோமெரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட ஆஸ்டின், தனது 10 மாத குழந்தை திடீரென சுவாசிப்பதை நிறுத்திவிட்ட தாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பின், அந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அதன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் மரணத்துக்கான முழு காரணத்தையும் மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார்,’ஆஸ்டின் தனது 10 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த குழந்தை அசைவற்ற நிலைக்கு சென்ற பின் சுவாசிப்பதை நிறுத்திவிட்டார். அவரது உடலில் பலத்த உள்காயம் இருந்தது. குற்றம்சாட்டப்பட்ட ஆஸ்டின், தனது மகள் இறந்துவிட்டாளா அல்லது உயிருடன் இருக்கிறாளா? என்று சோதிக்க வசதியாக, தனது கம்ப்யூட்டரில் கூகுள் மூலம் ஒரு மணி நேரம் விபரங்களை தேடி ஆலோசனை கேட்டுள்ளார். தனது இரண்டு நண்பர்களுக்கும் செய்தி அனுப்பி உதவி கேட்டார். பிரேத பரிசோதனையில் குழந்தை பாலியல் பலாத்காரத்தால் இறந்தது உறுதியானது. அதையடுத்து தற்போது ஆஸ்டின் கைது செய்யப்பட்டார்’ என்று தெரிவித்தனர்.