மின்சாரம் பாய்ந்து பம்ப் ஆபரேட்டர் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவணிப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (42). காவணிப்பாக்கம் கிராமத்தில் பம்ப் ஆபரேட்டராக  பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பிரபாகரன், கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக, மின்  மோட்டரை இயக்க சென்றார்.

அப்போது அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏரி சரி செய்ய முயன்றார். இதில், எதிர்பாராத விதமாக மின்சாரம்  பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பிரபாகரன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறந்தார்.புகாரின்படி சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

Related Stories: