பூந்தமல்லி, :போரூர் அருகே காதலை மறக்க தனியறையில் தியானம் செய்யும்போது சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த அர்ச்சகரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.போரூர் அருகே அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி (50). இவர், அப்பகுதி கோயில்களில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இவர்மீது பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று 19 வயதான இளம்பெண் புகார் அளித்தார். அவர் தனது புகாரில், காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நான், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்தேன். அந்த காதலை மறக்க தியானம் செய்ய வேண்டும் என அர்ச்சகர் சந்திரமவுலி கூறினார்.