ஸ்டாக்ஹோம்: அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றன நோபல் பரிசு, கடந்த 5ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாள் மருத்துவம், 2வது நாள் இயற்பியல், 3வது நாள் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக், இந்த பரிசை பெற்றுள்ளார்.