ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு: புனே மாணவர் முதலிடம்

புதுடெல்லி: பொறியியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. 8.58 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வை எழுதிய நிலையில், 2.5 லட்சம் பேர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு தகுதி பெற்றார். அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், 6,707 மாணவிகள் உட்பட 43,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புனேவைச் சேர்ந்த பலோர் என்ற மாணவன் 396 மதிப்பெண்ணுக்கு 352 மதிப்பெண் எடுத்துள்ளார். விஜயவாடாவைச் சேர்ந்த கங்குலா புவன் ரெட்டி 2ம், 3ம் இடங்களைப் பெற்றுள்ளனர். மாணவிகளில் கனிஷ்கா மிட்டல் 17ம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 315 மதிப்பெண்களுடன் மாணவிகள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த தேர்வு முடிவு அடைப்படையில், 23 ஐஐடிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Related Stories: