ஸ்ரீபெரும்புதூர்: படப்பை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலையில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த மணிமங்கலம், காந்தி நகரை சேர்ந்தவர் சதிஷ் (32), ரியல் எஸ்டேட் அதிபர். நேற்று முன்தினம் சதீஷ், தனது நண்பர்கள் ராமு, ஆறுமுகம், சுரேந்தர் ஆகியோருடன், படப்பை அடுத்த காவனூர் பகுதியில் வீட்டுமனையை பார்வையிட சென்றார். பின்னர், அஙகிருந்து காரில் படைப்புக்கு புறப்பட்டார். படப்பை அருகே ஒரத்தூர் மேம்பாலம் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த ஒரு கார், சதிஷ் காரை மறித்து நின்றது. அதில், இருந்து இறங்கிய மர்மநபர்கள், அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர். இதை கண்டதும், அவரது நண்பர்கள், காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.