ஹத்ராஸ் இளம்பெண் பலாத்கார குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை, செருப்பு அணிய மாட்டேன் :அரியானா ஆட்டோ டிரைவர் சபதம்!!

சண்டிகர்: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்கார கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரியானாவின் ஹித்ரா அடுத்த ஆரியநகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜ்பால் பும்ரா என்பவர், ஹத்ராஸ் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை, செருப்பு அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை, தனது ஆட்டோவில் பிளக்ஸ் பேனர் மூலம் விளம்பரப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாட்டை சங்கடப்படுத்திய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும். ஹத்ராசின் மகள் இப்போது நாட்டின் மகளாகிவிட்டார். பிரதமர் மோடி, பெண்கள் தொடர்பான சட்டத்தை மேலும் கடுமையாக்க வேண்டும்’ என்றார். முன்னதாக, டெல்லி நிர்பயா சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தூக்கிலிடப்பட்டபோது, ஆட்டோ டிரைவர் ராஜ்பால் அவரது வாடிக்கையாளர்களுக்கு இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இது தவிர, மாற்றுத்திறனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. விபத்தில் காயமடைந்த மக்களுக்கு இலவச பயண சேவை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: