கமுதி: கமுதி அருகே, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவில் 50 ஆடுகள் பலியிடப்பட்டு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தின் கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடக்கும் தேதி அறிவித்தது முதல் ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு திருவிழா துவங்கியதும், கால்படாத மண்ணெடுத்து அம்மன் பீடம் வடிவமைக்கப்பட்டது.