முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வனுக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன்(57). இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில், பொதுமக்களை நேரில் சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, காந்திசெல்வன் நேற்று கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

Related Stories: