நெல்லை: நெல்லை மாவட்டம் ஏர்வாடி முதியோர் காப்பகத்தில் ஏற்கனவே 24 பேருக்கு கொரோனா பரவிய நிலையில் ேநற்று 90 வயது முதியவர் உள்பட மேலும் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே முதியோர் காப்பகத்தில் தங்கியிருந்த 24 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள மேலும் பலருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.