திருத்தணி: திருத்தணி அருகே நெடுஞ்சாலையை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து கன்னிகாபுரம், மாம்பாக்கம் சத்திரம், ராமகிருஷ்ணாபுரம், சாமுண்
டிபுரம் வழியாக சோளிங்கர் வரை சுமார் 25 கி.மீ. மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லை பராமரிப்பில் உள்ளது. தற்போது இந்த சாலையின் இரண்டுபுறமும் விஷச் செடிகள் சுமார் 6 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளதால் சாலையை ஆக்கிரமித்து கிடக்கிறது.