சென்னை: அக்டோபர் 5ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடத்த மேலும் இரண்டு நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 அமர்வுகளில் வழக்குகள் நேரடியாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் புதுச்சேரி தவிர அனைத்து மாவட்ட நீதிமன்றங்களும் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து நேரடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் நேரடியாக வழக்குகளை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளனர். இது குறித்து உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) இந்துமதி வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், நீதிபதிகள் எம்.சுந்தர், அனிதா சுமந்த் ஆகியோர் அக்டோபர் 5ம் தேதி முதல் வழக்குகளை நீதிமன்றங்களில் அமர்ந்து நேரடியாக விசாரிக்க உள்ளனர்.