முதல்வர் பழனிசாமியின் நல்லாட்சிக்கு சாட்சியாக எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது : அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!!

ஈரோடு : ஜெயலலிதா வழியில் தற்போதைய முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “முதல்வர் பழனிசாமி ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அந்த நல்லாட்சியின் பயனாக எங்கும் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள், மக்கள் மகிழும் அளவிற்கு மழை பெய்து வருகிறது.கொரோனா தடுப்பு பணி சிறப்பாக உள்ளது என பிரதமரே பாராட்டும் வகையில் முதல்வர் செயல்பாடு உள்ளது. ஜெயலலிதா வழியில் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையில் நடக்கும் கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது? அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், அறைக்குள் பேசுவதை வெளியில் கூறுவது நாகரிகம் அல்ல என்பது தான் எனது கருத்து என்றார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில் அதிமுக அமைச்சர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அத்துடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரையும் அதிமுக நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: