திருத்தணி: திருத்தணி அருகே நேற்று காலை ஒரு சரக்கு ஆட்டோ அருகே புதரில் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தார். திருத்தணி அருகே கனகம்மாசத்திரம்-திருவாலங்காடு கூட்டு சாலையில், காவேரிராஜபுரம் கிராமப் பகுதியில் நேற்று காலை ஆந்திர மாநில பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோ ஒன்று அனாதையாக நின்றிருந்தது. அதன் அருகே புதரில் வாயில் நுரை தள்ளிய நிலையில் ஒரு வாலிபரின் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவேரிராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.