திருமலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அமிலம் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரியில் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில் இருந்து சென்னைக்கு நேற்று ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி சென்றது. குண்டூர் மாவட்டம் மங்களகிரி காஜா சுங்கச்சாவடி அருகே சென்றபோது திடீரென டேங்கர் லாரியின் டயர் பஞ்சர் ஆனது. அதேநேரம் டேங்கரில் இருந்து அமிலம் கசிந்தது. இதை கவனித்த டிரைவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.