கும்பகோணம் : வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் எடப்பாடி தான் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.வேளாண் மசோதாவை கண்டித்து கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மத்திய அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் பாதிக்கும் சட்டங்களை தான் கொண்டு வருகிறது. தற்போது விவசாய பாதிக்கும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.