திருவனந்தபுரம்: கேரளாவில் இலவச மளிகை கிட் விநியோகம் தொடரும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநிலம் முழுவதும் 88 லட்சத்து 42 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை கிட் விநியோகத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் டிசம்பர் வரை இந்த திட்டம் தொடரும் என்றார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் மாநிலத்தில் உள்ள அனைவரையும் மோசமாக பாதித்துள்ளது. இதனால் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கொரோனா பரவத்தொடங்கி லாக்-டவுன் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டங்களிலும், ஓணம் பண்டிகை காலத்திலும் இதேபோன்ற அத்தியாவசிய மளிகைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசியும் விநியோகிக்கப்படுகிறது.