புதுச்சேரி: புதுச்சேரி வீட்டில் பதுக்கிய பல கோடி ரூபாய் மதிப்பு 74 சிலைகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான கோயில் சாமி சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்றதாக சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனை கடந்த 2016ல் போலீசார் கைது செய்தனர். தீனதயாளன் கொடுத்த தகவலின்பேரில், புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக்கூடம் நடத்தும் புஷ்பராஜன் என்பவரிடம் விசாரணை நடத்தி உப்பளம் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ₹50 கோடி மதிப்பிலான சிலைகளை பறிமுதல் செய்தனர். மேலும், வீட்டின் உரிமையாளர் வனினாஆனந்தி (39) என்பவரை கைது செய்தனர்.