அம்பத்தூர்: பாடி பஜனை கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்ற ஆட்டோ டிரைவர் மகேஷ்குமாரை (24) போலீசார் கைது செய்து, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர், ஊரடங்கு காலத்தில் சவாரி இல்லாததால் ஆந்திராவில் இருந்து ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து, சிறிய பொட்டலங்களாக மாற்றி, சவாரிக்கு செல்லும் இடங்களில் விற்பனை செய்தது தெரிந்தது.